Saturday, December 20, 2008

ராமனடிமை வைக்கிறார் மாணவர்களுக்கு ஆப்பு...

ஹா. . . . . ஹா . . . .ஹா. . . . என்ன இது? ஆரம்பமே சிரிப்பா இருக்குதுன்னு பாக்குறீங்களா..அதான் இந்த அரசியல்வாதிகளால நம்ம வாழ்க்கையேதான் சிரிப்பா சிரிக்குதே.......
Latest சிரிப்பு, நம்ம மாணவர்கள் மேல மருத்துவர் அய்யா ராமனடிமைக்கு வந்த ”குபீர்” பாசம் தாங்க. . .
அதாவதுங்க,தமிழ் இசைய பள்ளியில ஒரு பாடமா வச்சி அதுல 100 மார்க்குக்கு பரிட்சை வேற வைக்கணுமாம்.
அவனவன் உள்ளத படிச்சாலே வேல கெடக்க மாட்டேங்குது.இதுல புதுசா தமிழ் இசைய வேற படிக்கணுமாம்.அவன் அத படிச்சா என்ன வேலைக்கு போவான். . . .?
தமிழ், தமிழ்-னு பேசுற நம்ம அரசியல்வாதிகளுக்கு தமிழன் மட்டும் வாழக்கூடாது.தமிழ், தமிழ்-னு கத்தி கூப்பாடு போடற இவங்க முதல்ல இவங்க வூட்டு புள்ளைகள தமிழ் மீடியத்துல் படிக்க வைப்பாங்களா . . . ?அன்புமணி புள்ள Delhi CBSE school-ல படிக்குது.
இந்தியை திணிக்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லியே இந்தியை படிக்க வுடல.இப்போதைய இரண்டாம் தலைமுறையான நம்மல தலையெடுக்கவும் வுடல. . .தமிழ்நாட்டுக்கு வெளியில வடநாட்டு பக்கம் மொழி தெரியாததால வேலை பாக்கவும் துப்பு இல்லாமலும் போச்சு. . . ஏதோ English-அ வச்சி அங்க பொழப்பு ஓடுது. . . .
இப்ப தமிழ், தமிழ்-னு சொல்லி சொல்லியெ அதுக்கும் வேட்டு வைக்க பாக்குறாங்களாக்கும். . .
எதை சொன்னாலும் முதல்ல உங்களுக்கு apply பண்ணி பாருங்க. . .நல்லாயிருந்தா மத்தவங்களுக்கு சொல்லுங்க. . .
மருத்துவர் அய்யா முதல்ல இதுமாதிரி உளறுறத நிறுத்துங்க.ஆனா இது உளறல் இல்ல,ராஜதந்திரம்னு எங்களுக்கு தெரியும்.
நாங்க படிச்சு வேலைக்கு போகாம இருந்தா தானே உங்கள மாதிரி ஆளுங்களையும்,உங்க வாரிசுகளையும் பல்லக்குல தூக்க முடியும்.நாங்க படிச்சுபுட்டா நாலு கேள்வி கேப்போம்,நீங்களும் பதில் சொல்லணும். . .இதெல்லாம் தேவையானு நீங்க நெனைக்கிறது புரியுது. . .
என்னமோ போங்க. . .
நாங்க தான் நல்லா இல்ல,
நீங்களாவது நல்லா இருங்க. . .


5 comments:

  1. உன் இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்தி, வாந்திஎடுக்க வந்த என்னை....

    இப்படி இசையை படிச்சு வர்ற மாணவர்களை உக்கார வெச்சு பேசலாம்னு எதுனா ஐடியா இருக்கும். ஆமா திட்டங்கள் போடுவது சம்பாதிக்கத்தான் என்ற தாரக மந்திரம் உங்களுக்கு தெரியாதா என்ன...

    ReplyDelete
  2. சிம்பா,
    வாங்க...மொதல்ல ஒரு திட்டத்த சொன்னா அதோட எதிர்கால செயல்பாட்டையும் சொல்லனும்னு ஒரு சட்டம் போடணும்.அப்ப தான் இவங்க எல்லாம் அடக்கி வாசிப்பாங்க...
    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  3. ஏன் இந்த கொலை வெறி?????????

    ReplyDelete
  4. அட நான் சொன்னது அவருக்கு மானவர்கள் மேலே ஏன் இந்த கொலை வெறி????? :)

    ReplyDelete
  5. நல்ல பதிவுகள்! இன்னும் அதிகம் எதிர்பார்கிறேன்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete